ரயில் வருவதை அறியாது தண்டவாளத்தில் நின்ற பெண் மீட்பு: வீடியோ வைரல்

மும்பையில், ரயில் வருவதை அறியாது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர்  ஓடிச்சென்று மீட்டுள்ளார்.

ரயில் வருவதை அறியாது தண்டவாளத்தில் நின்ற பெண் மீட்பு: வீடியோ வைரல்

மும்பையில், ரயில் வருவதை அறியாது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர்  ஓடிச்சென்று மீட்டுள்ளார்.

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாசாய் ரோடு ரயில் நிலையத்தில், பாதுகாப்பு பணியில் தலைமை காவலர் எக்னாத் நாயிக் ஈடுபட்டிருந்தார். அப்போது நிலையத்திற்குள் உள்ளூர் ரயில் நுழைவதை பார்த்த அவர், தண்டவாளத்தில் பெண் ஒருவர் நின்று கொண்டிருப்பதையும் கண்டுள்ளார். இதையடுத்து, ரயிலை உடனடியாக நிறுத்தும்படி ரயில் ஓட்டுனருக்கு சமிக்ஞை செய்து அந்த பெண்ணையும் ஓடிச்சென்று மீட்டுள்ளார்.

இதில் அந்த பெண் மனநலம் பாதித்தவர் என தெரியவந்துள்ளது. காவலரின் புத்திசாலித்தன செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், நாயிக்  கவுரவிக்கப்படுவார் என கூறியுள்ளது.

https://twitter.com/quaiser_khalid/status/1436663472167686148