ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி சோனியா காந்தி மலர் தூவி மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.

ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி சோனியா காந்தி மலர் தூவி மரியாதை

கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 -வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், டெல்லியில் உள்ள  ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.

இதேபோல் மகள் பிரியங்கா காந்தியும் தந்தையின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.