விபத்தில் சரிந்தவர்கள் மீது ஏறிய லாரி...! பரபரப்பான சிசிடிவி காட்சி..!
தெலுங்கானா மாநிலம் மேட்சல் நகரில் சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது அதிவேகமாக மோதிய பைக்...பைக் மீதி ஏறிய லாரி..!
தெலுங்கானா மாநிலம் மேட்சல் நகரில் இன்று அதிகாலை ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பேர் மற்றும் சாலையை கடக்க முயன்ற நபர் என மூவரும் கீழே விழுந்தனர். அதே சமயம் இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி கீழே விழுந்திருந்த இருசக்கர வாகனம் மீது ஏறி இறங்கியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஆண், பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த நபரும் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.