கேரளாவில் ஒரு மாணவனை 20 பேர் தாக்கும் வீடியோவால் பரபரப்பு!!
கேரளாவில் பள்ளி வகுப்பறையில் துவங்கிய வாய்த்தகராறு கலவரமாகி நடுரோட்டில் முடிந்தது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பட்டம் என்ற பகுதியில் சென்மேரிஸ் என்ற பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர் ஒருவரை 20 பேர் கொண்ட கும்பல் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வகுப்பறையில் ஏற்பட்ட வாய்த்தகராறு அடிதடி சண்டையாக மாறியுள்ளது. நேற்று காலையில் பள்ளிக்கு வருவதற்காக பேருந்திற்காக காத்திருந்த ஒரு மாணவனை 20 பேர் கொண்ட பள்ளி மாணவர் கும்பல் நடுரோட்டில் போட்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த 11ஆம் வகுப்பு படிக்கும் டானியல் என்ற மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவி வைரலாகிய இந்த வீடியோவால் விசாரணை நடத்திய பட்டம் போலீசார் பள்ளி மாணவர்கள் என்பதால் வழக்குபதிவு செய்யாமல் வீடியோவை ஆதாரமாக வைத்து, வீடியோவில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்களையும் காவல் நிலையத்தில் நேராக அழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.