மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது கல்வீச்சு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது கல்வீச்சு!

கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் மீது ஆகஸ்ட் 27 அன்று அதிகாலை மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். 

இந்த தாக்குதலில் அலுவலகத்தின் கண்ணாடிகள் சேதம் அடைந்தது. மேலும் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தன. 

இதுபற்றி திருவனந்தபுரம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அனவூர் நாகப்பன் கூறும்போது இன்று அதிகாலை 2 மணி அளவில் 9 பேர் கொண்ட கும்பல் 3 மோட்டார் சைக்கிளில் வந்து கல்வீச்சில் ஈடுபட்டனர் என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக கேரள காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.