இனி இதனை டெலிவரி செய்ய மாட்டோம்: அதிரடியாய் அறிவித்த சொமாட்டோ நிறுவனம்!!!...

மளிகை பொருட்கள் விநியோகிக்கும் சேவையை வருகிற 17ம் தேதியுடன் சொமாட்டோ நிறுவனம் நிறுத்திக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி இதனை டெலிவரி செய்ய மாட்டோம்: அதிரடியாய் அறிவித்த சொமாட்டோ நிறுவனம்!!!...

இணையவழியில் ஆர்டர் செய்யும் உணவுகளை விநியோகித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சொமாட்டோ, கொரோனா சூழலை முன்னிட்டு, கடந்தாண்டு முதல் வீடுகளுக்கு மளிகை பொருட்களை விநியோகிக்கும் சேவையை தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு விரைந்து மளிகை பொருட்களை டெலிவரி செய்த போதிலும், நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நீண்ட இடைவெளி இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த சேவையை 2வது முறையாக வருகிற செப்டம்பர் 17ம் தேதியுடன் நிறுத்திக்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை மளிகை கடைகளுக்கு எழுதிய மின்னஞ்சலில் சொமாட்டோ குறிப்பிட்டுள்ளது.