வெண்கலம் வெல்வாரா பி.வி.சிந்து... எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்...

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெறும் பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து வெண்கல பதக்கம் வெல்வாரா? என நாட்டு மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

வெண்கலம் வெல்வாரா பி.வி.சிந்து... எதிர்பார்ப்பில் இந்திய மக்கள்...
32-வது ஒலிம்பிக் திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியின் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சீன தைஃபே வீராங்கனை தை சூ-யிங்கை வென்று, தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வி அடைந்து ஏமாற்றினார். 
 
இந்நிலையில், வெண்கல பதக்கத்திற்கான போட்டி, இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், மற்றொரு அரையிறுதியில் தோல்வி அடைந்த சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். இதில் பி.வி. சிந்து வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வெல்வாரா? என நாட்டு மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
 
இதனிடையே, ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியின் காலிறுதி ஆட்டம், இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.