சென்னை சேப்பாக்கம்... டிக்கெட்டுக்காக குவியும் ரசிகர்கள்!!

சென்னை சேப்பாக்கம்... டிக்கெட்டுக்காக குவியும் ரசிகர்கள்!!

ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள சென்னை-பஞ்சாப் அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

16-வது ஐபிஎல் தொடரானது கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை மூன்று போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி, அதில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  இதனைத் தொடர்ந்து வருகின்ற 30 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. 

இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  போட்டியை காண, நேரடியாக டிக்கெட்டுகளை வாங்க, இரவு முதலே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.  இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க:   அரசு பணி செய்ய விடாமல் தடுத்த காங்கிரஸ் நிர்வாகி கைது...!!