ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அசத்திய இந்திய வீரர்கள்: ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றனர்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அசத்திய இந்திய வீரர்கள்: ரவிகுமார் தாஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 12வது நாளான இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிகுமார் தாஹியா, கொலம்பியா வீரரை எதிர்கொண்டு 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிப்பெற்றார். 
காலிறுதியில் பல்கேரியா வீரருடன் மோதியதில் 14-4 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மல்யுத்தத்தில் 86 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரர் தீபக் புனியா, நைஜீரிய வீரரை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி எளிதாக காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சீன வீரருடன் மோதிய தீபக் புனியா 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறினார்.