யாரும் ஏலத்தில் வாங்காத ரெய்னாவை.. சும்மா கெத்தாக என்ட்ரி கொடுக்க வைக்க போகும் முன்னணி அணி.. எந்த டீம் தெரியுமா?

ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத சுரேஷ் ரைனாவை முன்னணி டீம் ஒன்றில் விளையாட வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

யாரும் ஏலத்தில் வாங்காத ரெய்னாவை.. சும்மா கெத்தாக என்ட்ரி கொடுக்க வைக்க போகும் முன்னணி அணி.. எந்த டீம் தெரியுமா?

இந்த ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இந்த வாரத்திற்குள் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில்,  ஐபிஎல் துவங்க இன்னும் மூன்றே வாரங்கள் இருக்கும் நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அடிப்படை தொகை கொடுத்து வாங்கப்பட்ட இங்கிலாந்து முன்னணி வீரரான ஜேசன் ராய் ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அதனால், தற்போது அவரின் இடத்தை யார் நிரப்ப போகிறது என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், முன்னணி வீரர் சுரேஷ் ரைனாவை அந்த இடத்தில நிரப்ப பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடுத்தவர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 5வதுஇடத்தில் உள்ளார். கடந்த ஒரு சீசனில் சரியாக விளையாடவில்லை என்பதால் இவரை அணைத்து அணிகளும் புறக்கணித்தன.. குறிப்பாக சிஎஸ்கே அணிகூட சுரேஷ் ரெய்னாவை புறக்கணித்தது. தற்போது, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஒரு அனுபவ வீரர் தேவை படுகிறார். அதனால், சுரேஷ் ரெய்னாவை அந்த இடத்தில நிரப்ப பேச்சு வார்த்தை நடந்து வருகிறது..

குஜார்ட் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். கேப்டன்சியில் அவருக்கு அனுபவம் இல்லை  என்பதால், சுரேஷ் ரெய்னா அவருக்கு உதவியாக இருப்பார். மேலும் தோணி, ரோஹித் சர்மா ஆகியோரின் யுக்தியை நன்கு அறிந்தவர். இதனால் குஜார்ட் அணிக்கு இது ஒரு பெரும் பலமாக இருக்கும் என தெரிகிறது.