எனக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை : மாற்றுத்திறனாளி செஸ் வீராங்கனை கோபம்

பஞ்சாப் மாநில அரசு தமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக, காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத செஸ் விளையாட்டு வீராங்கனை மலிகா ஹண்டா குற்றம் சாட்டியுள்ளார்.

எனக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை : மாற்றுத்திறனாளி செஸ் வீராங்கனை கோபம்

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களை வென்ற ஜலந்தரை சேர்ந்த அவருக்கு, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பரிசுத்தொகையை அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா காரணமாக பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, விளையாட்டுத்துறை அமைச்சரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் பர்கத் சிங்கை, மாற்றுத்திறனாளி செஸ் வீராங்கனை மலிகா ஹண்டா சந்தித்து பேசியுள்ளார். அப்போது, மாநில அரசால் அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையை வழங்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார்.

இதனால் கோபமும் வேதனையும் அடைந்த மலிகா ஹண்டா, தற்போதைய பஞ்சாப் அரசு தமது வாழ்நாளில் 5 ஆண்டுகளை வீணடித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.