உலக கோப்பை கிரிக்கெட்: சிறப்பு ரயில் இயக்கம்..!

உலக கோப்பை கிரிக்கெட்: சிறப்பு ரயில் இயக்கம்..!

சென்னையில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா- ஆஸ்திரேலியா இடையே உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

இதனிடையே, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் பறக்கும் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதில் வருகிற 8, 13, 18, 23, 27 ஆகிய 5 நாட்கள் சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும்  படிக்க  |  மல்யுத்த வீரர்கள் விவகாரம்: பிரிஜ் பூஷன் சிங் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் .!