வணிக வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்.....

சிதம்பரம் அருகே வணிக வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 19 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வணிக வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்.....

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கொத்தட்டை கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குள்ள வணிக வளாகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தியதில், மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீசார், அதன் மதிப்பு சுமார் 3 டன் எனவும், 19 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் விலை எனவும் தெரிவித்தனர். மேலும், குட்கா பதுக்கியதாக இளவரசன் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.