கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு...! 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு..!

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழப்பு...! 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு..!

திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க தமிழ்நாடு அரசுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

அவிநாசியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில்,  தாய்- தந்தையை இழந்த 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.  இவர்களுக்கு நேற்றிரவு ரசம் சாதம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதனை சாப்பிட்ட 15க்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு வாந்தி, காய்ச்சல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே சமூக நலத்துறை ஏற்படுத்திய தனிக்குழுவும் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் தனித்தனியாக விவரங்களை கேட்டறிந்துள்ளது.

கெட்டுபோன உணவை சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டதா என்ற தகவல் இன்னும் உறுதியாகாத நிலையில், காப்பகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் வினீத் சம்பவம் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இதனிடையே இந்த விவகாரத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்பிக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.