உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.4.39 லட்சம் பறிமுதல்....

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துவரப்பட்ட 4 லட்சத்து 39 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.4.39 லட்சம் பறிமுதல்....

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கிழக்குக்கடற்கரை சாலையில், தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காரை தடுத்தி நிறுத்தி சோதனை மேற்க்கொண்டனர்.

சோதனையில் காரில் வந்த நபர் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் பட்டாபுபளம் பகுதியை சேர்ந்த வேணு என்பதும் உரிய ஆவணமின்றி 4 லட்சத்து 39 ஆயிரத்து 700 ரூபாயை காரில் எடுத்து வந்ததும் தெரியவந்தது.

பின்னர் அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், இது தொடர்பாக விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.