நெய்வலி : பாமக பந்த்...90% கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் அவதி...!

நெய்வலி :  பாமக பந்த்...90% கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் அவதி...!

பாட்டாளி மக்கள் கட்சியினரின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

என்.எல்.சி 2-வது சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : ’ஜெயிலர்’: முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோ...இணையத்தில் வைரல்!

இதனை கண்டிக்கும் வகையில், கடலூரில் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதனால், நெய்வேலி, மந்தாரக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எனினும், அரசுப் பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.