அடிக்கடி செல்போன் பயன்படுத்திய மகள்... தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை!!

செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் 20 வயது இளம்பெண் ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடிக்கடி செல்போன் பயன்படுத்திய மகள்... தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஜனனி. 20 வயதான இவர், அப்பகுதியில் உள்ள  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இதனிடையே வீட்டில் எந்நேரமும் செல்போனை பயன்படுத்தி வந்ததால், அவரது தாயார் ஜனனியை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ஜனனி, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.