குழந்தை தொட்டிலில் விளையாடிய 40 வயது நபர்... கழுத்து இறுக்கி உயிரிழந்த சோகம்

பேரக் குழந்தையின் தொட்டிலில் விளையாடிய நபர் கழுத்து இறுக்கி உயிரிழந்த சம்பவம் அரியமங்கலத்தில் அரங்கேறியுள்ளது.

குழந்தை தொட்டிலில் விளையாடிய 40 வயது நபர்... கழுத்து இறுக்கி உயிரிழந்த சோகம்

திருச்சி அரியமங்கலம் மலையப்ப நகரை சேர்ந்தவர் லிங்கன். இவரது குடும்பத்தினர் வெளியே சென்றதை அடுத்து லிங்கன் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது, 40 வயதான இவர் தனது பேரக் குழந்தையை படுக்க வைக்கும் தொட்டிலில் தனது தலையை வைத்து விளையாடியுள்ளார்.

தன்னை சிறு குழந்தையென நினைத்து விளையாடிய லிங்கனுக்கு எதிர்பாராத விதமாக தொட்டில் தலையை இறுக்கி உள்ளது. இதனால் அவர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து வெளியே சென்ற குடும்பத்தார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தொட்டிலில் கழுத்து தொங்கிய நிலையில் லிங்கன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மதுபோதையில் குழந்தையின் தொட்டிலில் தலையை வைத்து விளையாடி இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பேரக்குழந்தையின் தொட்டிலில் விளையாடிய 40-வயது நபர் கழுத்து இறுக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.