திருமணம் முடிந்த 3 நாளில் கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி..!!

மதுரையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் கழுத்தில் தாலியோடு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடிந்த 3 நாளில் கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவி..!!

மதுரை அரசு உதவிபெறும் பள்ளியில் திருமணம் முடிந்த நிலையில் பள்ளிக்கு திரும்பிய மாணவியை கண்டு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் என அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் பின் பள்ளி நிர்வாகம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவல் அறிந்த வந்த சமூக நலத்துறையினர் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் மாணவி கடந்த ஞாயிறு தனக்கு திருமணம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மாணவியிடம் தகவலை கேட்டறிந்த அதிகாரிகள் உரிய வயது தொடங்காத நிலையில் திருமணம் முடித்த பெற்றோரின் மீதும் மாணவியை திருமணம் செய்து கொண்ட அருண்பிரகாஷ் என்பவர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் மாணவியை மீட்டு அரசுக் காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் வயதில் திருமணம் செய்து வைத்த இச்சம்பவம் அப்பகுதியிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.