கரும்பு கட்டுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயி...!

கரும்பு கட்டுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயி...!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் கரும்பு கட்டுடன் வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

செங்கல்பட்டு மாவட்டம் தண்டரை அடுத்த ஆதிகேசவபுரம் பகுதியை சேர்ந்த சங்குபாணி என்பவர், 5 ஏக்கரில் கரும்பு நடவு செய்வதற்காக ஒரகடம் கூட்டுறவு வங்கியில் சுமார் 2 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. 

இதையும் படிக்க : சிதம்பரம் விவகாரம் : எஸ்.ஜி. சூர்யாவிற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆனால், கரும்பு நடவு செய்த நாள் முதல் இன்று வரை உரம் கிடைக்காத நிலையில், கரும்பு வெட்டுவதற்கு தேவையான உத்தரவும் வழங்கப்பட வில்லை என தெரிகிறது. 

இந்நிலையில், விவசாயி சங்குபாணி தன் மனைவியுடன் ஒரு கட்டு கரும்பை எடுத்துக்கொண்டு ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளார். அவர் அளித்த மனுவில், வங்கியில் பெற்ற கடன் தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார்.