முன்னுரிமை அடிப்படையில் உயர்மட்ட பாலம் - அமைச்சர் எ.வ.வேலு!

முன்னுரிமை அடிப்படையில் உயர்மட்ட பாலம் - அமைச்சர் எ.வ.வேலு!

திருப்பூர் அனுப்பர் பாளையத்தில் உள்ள தரைப் பாலம், முன்னுரிமை அடிப்படையில் உயர்மட்ட பாலமாக மாற்றப்படும் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். 


தமிழ்நாடு சட்டப்பேரவையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், அனுப்பர் பாளையத்தில் இருந்து மின் மயானத்திற்கு  செல்லும் தரைப்பாலம் உயர் மட்ட பாலமாக மாற்றப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : இந்தாண்டுக்குள் கழிவுகளை உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் - அமைச்சர் கே. என்.நேரு!

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இப்பகுதியில் இதுவரை எந்த வெள்ள பாதிப்பும் வரவில்லை என்றும், இருந்தாலும் முன்னுரிமை அடிப்படையில் உயர் மட்ட பாலம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.