இருசக்கர வாகனத்தில் சென்றவரை துரத்திய ஒற்றை காட்டு யானை...மயிரிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி....!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஒற்றை காட்டு யானையிடம் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் சென்றவரை துரத்திய ஒற்றை காட்டு யானை...மயிரிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி....!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நிற்பதும் சாலையை கடப்பதும் வழக்கம்.

இந்நிலையில் கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று கடம்பூரில் இருந்து குன்றி செல்லும் சாலையில் வரும் வாகனங்களை வழிமறித்து நின்றதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டியை ஒற்றை காட்டு யானை திடீரென துரத்த ஆரம்பித்தது.

இதை சற்றும் எதிர்பாரார்த அவர் உயிர் பிழைத்தால் மட்டும் போதும் என்று தனது வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடி மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது..