தொல். திருமாவளவனின் பேச்சு கூட்டணியில் சர்ச்சை கிளப்புமா ?

கீரா இயக்கத்தின் இரும்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டார்.

தொல். திருமாவளவனின் பேச்சு  கூட்டணியில் சர்ச்சை கிளப்புமா ?

நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பேரன் ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்பன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த விழாவில் பேசிய திருமாவளவன், இன்றைக்கு திரைத்துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகி வருகிறது. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்துவிட்டால் என்ன ஆகும் ? தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், இயக்குநர்களின் உரிமைகள் பறிபோய் இருக்கிறது.

65 கிடா வெட்டி 10,000 ஆண்கள் கலந்து கொண்ட அசைவ திருவிழா

மேலும்  படிக்க | 


இது தொழில் போட்டி மட்டுமல்ல, தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுகிற மோசமான அணுகுமுறை. அரசியலை போல சினிமாவிலும் தனிநபரை சார்ந்திருக்கக்கூடிய நிலை வளர்ந்துவருகிறது. யாரையும் மனதில் வைத்துக்கொண்டோ, எதிராகவோ பேசவில்லை. சமூக பொறுப்புணர்வு என்ற அடிப்படையில் தான் இதனை பேசுகிறேன்.

இது தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் மிக மோசமான அணுகுமுறை. எல்லாவற்றையிலும் தமிழ்நாடு பிறருக்கு முன்னோடியாக இருக்கிறது. சினிமாவுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் பங்கு உண்டு. அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் ஆவார்கள்.

மேலும் படிக்க | 12 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு...! தேர்வுக்கட்டணம் குறித்த அறிவிப்பு

சினிமாவை வருமானத்துக்கு மட்டுமல்லாமல் கொள்கைகளுக்காகவும் பயன்படுத்தினார்கள் என்று பேசினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தான் தாக்கி பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.