அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெங்சுவலி...! சாதுரியமாக செயல்பட்ட பயணி..!

அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக பயணி ஒருவர் பேருந்தை இயக்கி பெரும் விபத்தில் இருந்து பயணிகளை காப்பாற்றியுள்ளார்.

அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெங்சுவலி...! சாதுரியமாக செயல்பட்ட பயணி..!

ஈரோடு திண்டல் அருகே சேலம் கோட்டத்திற்குட்பட்ட பேருந்து வழக்கம்போல் ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பயணித்தனர். இந்நிலையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அவர் இடதுபுறம் சாய்ந்து உள்ளார்.

உடனடியாக பயணி ஒருவர் பெரும் விபத்து ஏற்படாவண்ணம் சென்டர் மீடியனில் பேருந்தை பயங்கரமாக மோதச் செய்து விபத்தை தவிர்த்துள்ளார். மேலும் உடனடியாக பேருந்து ஓட்டுனரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடம் விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் நிலவிய போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவரச் செய்தார்.

பள்ளி கல்லூரிகள் அதிக அளவில் உள்ள சாலையில் ஏற்பட்ட இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.