13 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளி..! போக்சோவில் கைது செய்த போலீசார்..!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சிறுவனை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த சுமை தூக்கும் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளி..! போக்சோவில் கைது செய்த போலீசார்..!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சிறுவனை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த   சுமை தூக்கும் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவை சேர்ந்தவர் செல்வேந்திரன்(40). இவர் சுமை தூக்கும் வேலை செய்து வருகிறார். இவர் திருமணமாகி கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக 13 வயது சிறுவனை மிரட்டி  பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. மிரட்டலுக்கு பயந்த சிறுவன் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். 

இது குறித்து சிறுவனின் பெற்றோர்கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்வேந்திரனை போகோசோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.