இன்று மாலை நடக்கும் அதிமுக மாவட்ட செயலாளா்கள் கூட்டம்!

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஆலோசிப்பதற்காக அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

இன்று மாலை நடக்கும் அதிமுக மாவட்ட செயலாளா்கள் கூட்டம்!

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஆலோசிப்பதற்காக அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று நடக்கிறது. மாலை 4 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தலைமை வகிக்க உள்ளனா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மாவட்டச் செயலாளா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக தலைமை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.