“இரு மொழிக்கொள்கையில் அதிமுக உறுதி” - ஓ. பன்னீர்செல்வம்

இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில் தாங்களாகவே மனம்வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் கற்றுக் கொள்ளட்டும்..

“இரு மொழிக்கொள்கையில் அதிமுக உறுதி” - ஓ. பன்னீர்செல்வம்

இரு மொழிக்கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது அக்கட்சியின் ஒருங்கணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில் தாங்களாகவே மனம்வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் கற்றுக் கொள்ளட்டும் என்றும்,

இந்தி திணக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அண்ணா கூறி இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள ஒ. பன்னீர்செல்வம், தமிழகத்தில் நீண்ட நாட்களாக இரு மொழிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இன்றுவரை இந்தியாவில ஆங்கிலம் இருக்கிறது என்றால், அதற்கு மூல காரணம் அண்ணா தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் இரு மொழிக் கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது எனவும், தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அதிமுகவின் நிலைப்பாடு தெளிவாக்ககப்பட்டு விட்டது எனவும் ஒ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்