ஏ.டி.எம். மையத்தை அடித்து உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர்.....

தேன்கனிக்கோட்டை பகுதியில் நள்ளிரவில் முதியவர் ஒருவர் ஏ.டி.எம். மையங்களை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏ.டி.எம். மையத்தை அடித்து உடைத்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர்.....

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மைத்தில் இருந்து அலாரம் சத்தம் கேட்டுள்ளது. அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஏ.டி.எம். மையத்திற்குள் சென்று பார்த்தபோது, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், தடியால் ஏ.டி.எம். மையத்தை உடைத்துக் கொண்டிருந்தார்.

அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் , அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

மேலும், அதே பகுதியில் உள்ள மற்ற 3 ஏ.டி.எம். மையங்களையும், டி.வி. சர்வீஸ் செய்யும் கடை ஒன்றையும், இவர் அடித்து சேதப்படுத்தியது தெரியவந்தது.