சாதனை படைத்த மெகா தடுப்பூசி முகாம்... ஒரே நாளில் 28.85 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டது...

தமிழகத்தில் 3வது மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற 28 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

சாதனை படைத்த மெகா தடுப்பூசி முகாம்... ஒரே நாளில் 28.85 லட்சம் டோஸ் செலுத்தப்பட்டது...

தமிழகத்தில் கடந்த இரு தடுப்பூசி முகாம்களிலும் இலக்கைவிட கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. அதேபோன்று தமிழகம் முழுவதும் 3-ஆவது மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.  இதன் மூலம் 60 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனா் என்ற நிலை ஏற்படும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  பிற்பகல் 2 மணி நிலவரப்படி 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தடுப்பூசி இலக்கான 15 லட்சம் 2 மணிக்கே எட்டப்பட்டது.  இந்த நிலையில், இரவு நிலவரப்படி தமிழகத்தில் 3வது மெகா சிறப்பு முகாமில் பங்கேற்ற 28 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.