ஆடிப்பெருக்கு அன்று மட்டும் அரசுக்கு வருவாய் எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி நேற்று ஆடிபெருக்கு அன்று மட்டும் தமிழக அரசின் ஒரு நாள் வருவாய் மட்டும் சுமார் 100 கோடி என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, 03.08.2023 ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு , பொது மக்களால் அதிக அளவில் ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால் பொது மக்கள் பதிவு செய்ய விரும்பும் அனைத்து ஆவனங்களுக்கும் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக ஏற்கனவே உள்ள 100 முன்பதிவு வில்லைகளுடன் 50 முன்பதிவு வில்லைகள் சேர்க்கப்பட்டு 150 -ஆக உயர்த்தப்பட்டது.
ஆவணங்கள் பதிவு செய்ய பதிவுத்துறை இணையதளத்தில் சொத்து தொடர்பான விவரங்கள் உள்ளீடு செய்து முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு ஒரு நாளைக்கு 100 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு ஒரு நாளைக்கு 200 முன்பதிவு வில்லைகளும், மேலும், அதிக ஆவணப்பதிவு கொண்ட 100 முன்பதிவு அலுவலகங்களுக்கு ஒரு நாளைக்கு 100 சாதாரண முன்பதிவு வில்லைகளும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளும் இணைய வழி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இன்னிலையில், 03.08.2023 ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஏற்கனவே உள்ள 100 முன்பதிவு வில்லைகளுடன் 50 முன்பதிவு வில்லைகள் இணையத்தில் அதிகரிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பெரும் வகையில் 150 ஆக உயர்த்தப்பட்டது.
இதனால் ஆவணம் பதிவு செய்ய விரும்பிய அனைத்து பொது மக்களுக்கும் முன்பதிவு வில்லைகள் எவ்வித தட்டுப்பாடுமின்றி கிடைப்பதற்கு ஆவண செய்யப்பட்டது. இதன் மூலம் ஆடிப்பெருக்கன்று ஒரு நாள் மட்டும் அரசுக்கு ரூ. 100 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு ..! - சென்னை உயர்நீதிமன்றம்.