ஆதித்தியா விண்கலம் ஏவுதல்; கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை...! 

ஆதித்தியா விண்கலம் ஏவுதல்; கடலுக்குள் செல்ல மீனவர்களுக்கு தடை...! 

ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை ஆதித்யா விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதால், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் நாளை காலை 11.50மணிக்கு ஆதித்யா-L1 விண்கலம் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுப்பட உள்ளது. 

இதற்கான கவுன்டவுன் இன்று காலை துவங்வதால், ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. 

அதன்படிஇன்று மாலை முதல் நாளை வரை பழவேற்காடு மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம், திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

இதையும் படிக்க   |  ஆதித்யா-எல்1 விண்கலம்; கவுண்டவுன் இன்று தொடக்கம்...!