டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை...

தமிழகத்தில் குரூப் - 2, குரூப் - 2A மற்றும் குரூப் - 4 ஆகிய தேர்வுகளை நடத்துவது குறித்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை...

தமிழகத்தில் குரூப் - 2, குரூப் - 2A மற்றும் குரூப் - 4 ஆகிய தேர்வுகளை நடத்துவது குறித்து, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் போட்டித் தேர்வுகளை நடத்தாமல் உள்ளது. 2019ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மட்டும் அவ்வப்போது நடைபெற்ற வந்தன. இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் போட்டித் தேர்வுகளை நடத்துவது குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பிராட்வேயில் உள்ள அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், குரூப் - 2, குரூப் - 2A மற்றும் குரூப் - 4 உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை, எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து, தேர்வுகளின் தேதி இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும், அனைத்து வகை தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.