சர்வீஸுக்காக விடப்பட்ட இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடும் ஊழியர்...

சேலத்தில் சர்வீஸுக்காக விடப்பட்ட இருசக்கர வாகனத்தில் ஊழியர் ஒருவர் பெட்ரோலை திருடும் காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது

சர்வீஸுக்காக விடப்பட்ட இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடும் ஊழியர்...

 சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் இருசக்கர வாகன சர்வீஸ் சென்டரில் சர்வீஸுக்காக விடப்படும் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதாக பலர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்நிலையில், அந்நிறுவன ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறி எடுத்துச் சென்று, அந்த வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடி மற்றொரு வாகனத்தில் நிரப்பியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.