ரயில் தண்டவாளத்திற்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தில் நடை பயின்ற முதியவர்! வைரல் வீடியோ

ரயில்வே டிராக்கிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் முதியவர் ஒருவர் ஏறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரயில் தண்டவாளத்திற்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தில் நடை பயின்ற முதியவர்! வைரல் வீடியோ

புதுச்சேரியில் ரயில்வே தண்டவாளத்திற்கு மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தில் முதியவர் ஒருவர் நடை பயின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்ட பொதுமக்கள், இது குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், முதியவரிடம் பேசி கீழே வரவழைத்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், மின்கம்பத்தில் நடை பயின்ற நபர், விழுப்புரத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் எதற்காக புதுச்சேரி வந்தார்.. அவரின் உறவினர்கள் குறித்தும் போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.