ஜார்ஜ் பொன்னையா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்... பாஜக தலைவர் அண்ணாமைலை பேட்டி...

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமைலை கூறியுள்ளார்.

ஜார்ஜ் பொன்னையா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்... பாஜக தலைவர் அண்ணாமைலை பேட்டி...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார்.
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில்,
 
இந்து மதத் தலைவர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் இழிவாக பேசிய பாதிரியாரை கண்டித்து பாஜக போராட்டம் அறிவித்து அதன் எதிரொலியாக தமிழக அரசு பாதிரியாரை தற்போது கைது செய்துள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
மத்திய அரசு தடுப்பூசி ஒதுக்கீடு விவகாரத்தில் ஜூன் மாதம் ஒதுக்கீடாக அறிவித்தது 41லட்சம் தடுப்பூசிகள் எனவும் ஆனால் ஜூன் மாதத்தில் 52 லட்சம் டோஸ் தடுப்பு ஊசிகள் தமிழகத்திற்கு மத்திய ஒதுக்கீட்டை விட கூடுதல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும் தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அமைச்சர்களை சந்திக்கும் பொழுது மத்திய அரசு சிறப்பாக ஒத்துழைப்பு தருவதாக கூறும் தமிழக அமைச்சர்கள் சென்னை வந்தவுடன் மத்திய அரசு பாராமுகமாக செயல்படுவதாக தடுப்பூசி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.