"ஊழல் செய்வதில் திமுகவை போல் ஒரு கட்சி இந்தியாவிலேயே கிடையாது" அண்ணாமலை!

ஊழல் செய்வதில் திமுகவை போல் ஒரு கட்சி இந்தியாவிலேயே கிடையாது என பாஜக மாநில தலைவா் அண்ணாமலை விமா்சித்துள்ளாா். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்கினாா். அப்போது அவருக்கு கட்சியினா் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் நிா்வாகிகள் கும்ப மாியாதை மற்றும் திாிசூலம் வழங்கி வரவேற்றனா்.

தொடா்ந்து பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் தமிழ்நாட்டில் விலைவாசி உயா்வு அதிகாித்து விட்டதாகவும், மின் கட்டணம் 15  சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை விலை ஏற்றம் அடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினாா்.

நாட்டில் ஏழைகளே இருக்கக்கூடாது என பிரதமா் மோடி விரும்புவதாக தொிவித்த அண்ணாமலை, சனாதானம் இருக்கக் கூடாது, இந்து தர்மம் இருக்கக் கூடாது என திமுகவினர் பேசி வருவதாக கூறினாா். தொடா்ந்து பேசிய அவா், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி எப்போது அகலும், இருள் எப்போது நீங்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக தொிவித்தாா்.

மேலும் ஊழல் செய்வதில் திமுகவை போல் ஒரு கட்சி இந்தியாவிலேயே இருக்க முடியாது என விமா்சித்த அண்ணாமலை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 400 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என நம்பிக்கை தொிவித்தாா்.