மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்...!

சீர்காழி அருகே மடவாமேடு மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தரப்படும் என உறுதியளித்தார்.

மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்...!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மடவாமேடு என்ற மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு கடல் அரிப்பு ஏற்பட்டு கடந்த 40 நாட்களில் சுமார் 60 மீட்டர்  கடல் நீர் கிராமத்தில் உட்புகுந்துள்ளது.  தொடர்ந்து கடல் அரிப்பு  ஏற்பட்டு வருவதால், மீனவ கிராம மக்கள் படகுகளை கடலுக்குள் செலுத்துவதிலும், கரை மேலே வருவதிலும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கருங்கற்களை கரையோர பகுதியில் கொட்டி பலப்படுத்தப்படும் எனவும் இந்த பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிராம மக்களிடம் உறுதியளித்தனர்.