நிதியமைச்சர் பிடிஆரின் ஆடியோ...பாஜகவின் கோரிக்கை...!!
நிதியமைச்சர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோவின் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாஜக குழு வலியுறுத்தியுள்ளது.
பிடிஆர் ஆடியோ:
சமீபத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அது குறித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
கோரிக்கை:
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்த ஆடியோ போலியாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் உண்மை இல்லை எனவும் பிடிஆர் விளக்கம் அளிந்திருந்தார். இந்நிலையில் அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையை தடயவியல் தணிக்கை செய்யக் கோரி பாஜக நிர்வாகிகள் குழுவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து வலியுறுத்தினர்.
உண்மை என்ன?:
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, ஆடியோ விவகாரத்தின் உண்மைத்தன்மையை கண்டறிய ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். இதனிடையே மத்திய பாஜகவின் அனுமதி பெற்றுதான் திமுக பைல் வெளியிட்டீர்களா என்ற மாலை முரசு செய்தியாளரின் கேள்விக்கு துரைசாமி ஆவேசமாக பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி....!!!