தேவை ஏற்பட்டால் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - செந்தில் பாலாஜி!

தேவை ஏற்பட்டால் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - செந்தில் பாலாஜி!

கருக்காலகுறிச்சியில், துணை மின் நிலையம் அமைக்க தேவை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, புதுக்கோட்டை கருக்காலகுறிச்சியில்  துணை மின் நிலையம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க : உறுப்பினர் எதிர்பார்த்ததைவிட கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உறுதி!

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்சமயம் அப்பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு தேவை இல்லை என்றும், வரும் ஆண்டுகளில் துணை மின் நிலையம் அமைக்க தேவை ஏற்பட்டால், தேவைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.