பெரியார் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகர் கைது..!

பெரியார் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகர் கைது..!

தூத்துக்குடியில் பெரியார் குறித்து சமூக வலைத்தளத்தில் தவறான தகவல் பரப்பிய பாஜ.க. பிரமுகரை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாநகரில் உள்ள புதுகிராமம் பகுதியை சேர்ந்தவர் செளந்திரராஜன். இவரது மகன் ஜான் ரவி (52)  தொழிலதிபர். இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் திமுகவினர் மற்றும் முதலமைச்சரை விமர்சனம் செய்து வருவார்.

இந்நிலையில், கடந்த தினத்தில் இவரின் சமூகவலைத்தள பக்கத்தில் திமுக ஆட்சியை குறை சொல்வது, தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பெரியார் குறித்து விமர்சனம் செய்துள்ளார். இதில் பெரியார் குறித்து  தகாதவாறு பதிவு செய்துள்ளார்..

இந்தநிலையில், மதுரை சைபர் கிரைம் போலீசார் சொந்த ஊரான தூத்துக்குடி புதுகிராமத்தில் உள்ள இவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.  (153A) மதம், இனம், ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்;  (504) சமூகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல். (505 1b) வதந்தியை பரப்புதல் ஆகிய பிரிவுகளில் கைது செய்துள்ளனர்.

மேலும், இவர் தனது தந்தை இறந்து சில நாட்களே ஆன நிலையில், 16-ம் நாள் காரியம் செய்வதற்கு தூத்துக்குடி வந்துள்ளார். அப்போது தான் போலீசார் இவரை கைது செய்தனர். மேலும் இவர், மதுரை மேஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்,.. இதே போன்று சமூக வலைதளத்தில் முதல்வர் குறித்து தவறான தகவல் பதிவிட்டதால் தமிழக போலீசார்  குஜராத்-த்திற்கு சென்று இவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க   | "போலி திராவிடத்தின் மாயாஜாலம் வெகு நாள் நீடிக்காது" - மத்திய அமைச்சர் எல். முருகன்