ரெயின்கோட் அணிந்து சைக்கிள் திருடும் கொள்ளையன்: சிசிடிவி காட்சி வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் rain coat அணிந்து மர்ம நபர் சிறுவர்களின் சைக்கிளை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ரெயின்கோட் அணிந்து சைக்கிள் திருடும் கொள்ளையன்:  சிசிடிவி காட்சி வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் rain coat அணிந்து மர்ம நபர் சிறுவர்களின் சைக்கிளை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், பி.டி. நகர், சூரிய காந்தி தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன்(43), சாப்ட்வேர் நிறுவனத்தில் செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பிள்ளைகளின் சைக்கிள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு ரெயின்கோட், முக கவசம் அணிந்து வந்த மர்ம நபர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை நீண்ட நேரமாக கையில் டார்ச் லைட் வைத்துக்கொண்டு நோட்டமிடுகிறார்.

அந்த இடத்தில் வேறு ஏதாவது பொருள் கிடைக்குமா என்று தேடி பார்த்த நிலையில் வாகனங்களை எடுத்து சொல்ல முடியாத சூழல் இருந்ததால் இறுதியாக சிறுவர்கள் ஓட்டும் சைக்கிளை மட்டும் அந்த நபர் அங்கிருந்து திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்ததன் பேரில் மாங்காடு போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு சிறுவர்கள் ஓட்டும் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.