சுடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்...பட்டாகத்தியால் கேக் வெட்டிய இளைஞர் கைது

திருத்தணி அருகே சுடுகாட்டில் நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சுடுகாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்...பட்டாகத்தியால் கேக் வெட்டிய இளைஞர் கைது

திருத்தணி அருகில் உள்ள மத்தூர் காலனி  பகுதியை சேர்ந்தவர் உதய குமார். 24 வயதான இவர் அதே ஊரில் உள்ள சுடுகாட்டில் அவரது நண்பர்களுடன் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்,

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது, இதனையடுத்து திருத்தணி போலீசார் பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய உதயகுமாரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட உதயகுமார்  ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.