செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை....

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய  பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை  உடைத்து கொள்ளை....

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுண் காந்தி சாலை அருகே உள்ள RPN காம்ப்ளக்ஸில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தீப்சிங் என்பவர்  கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன்  உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை  நடத்தி வந்தார் 

இதனை தொடர்ந்து  கடையின் உரிமையாளர் தீப்சிங்  நேற்றிரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இன்று அதிகாலை வழக்கமாக கடையை திறக்க வந்தவர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது 15 இலட்சம் ருபாய்  மதிப்பிலான செல் போன் உதிரி பாகங்கள் கடையிலிருந்து கொள்ளை போனது தெரிய வந்தது. இது தொடர்பாக ஆரணி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் வந்த போலீசார், திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.