கோவில் பூட்டை உடைத்து 2 ஐம்பொன் சிலைகள் திருட்டு.... மர்மநபர்களுக்கு வலைவீச்சு...

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கோவில் பூட்டை உடைத்து 2 ஐம்பொன் சிலைகள் மற்றும் 4 கிராம் தங்க காசு திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவில் பூட்டை உடைத்து 2 ஐம்பொன் சிலைகள் திருட்டு.... மர்மநபர்களுக்கு வலைவீச்சு...

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே சிவகாமி அம்மை உடனுறை கைலாசநாதர் சன்னிதி உள்ளது. இந்த கோவிலில் கடந்த மூன்று நாட்களாக கோவிலுக்கு தீட்சிதர் வரவில்லை என கூறப்படுகிறது. அதனைதொடர்ந்து இன்று கோவிலுக்கு வந்த தீட்சிதர் கோவிலின் வெளிப்புற கதவைத் திறந்து உள்ளே சென்று பாத்துள்ளார்.

அப்போது கோவிலின் கருவறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தீட்சிதர், கருவறையில் இருந்த சிவகாமி அம்மன் சிலை, சிவன் பார்வதி சிலை மற்றும் இரண்டு ஐம்பொன் சிலைகள் மற்றும் 4 கிராம் தங்க காசு உள்ளிட்டசை காணாமல் போனது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து கோவில் நிர்வாகி, தீட்சிதர் உள்ளிட்டோர் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்க்கொண்டனர்.