3 நிமிடத்திற்கு ரூ.3000 வாங்கி கொள்ளுங்கள்... பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய அண்ணாமலை

பத்திரிகையாளர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரக்குறைவாக பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 நிமிடத்திற்கு ரூ.3000 வாங்கி கொள்ளுங்கள்... பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய அண்ணாமலை

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம், பிரதமர் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்தது குறித்து யூடியூப் சேனலை சேர்ந்த செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதனால் பொறுமையிழந்த அண்ணாமலை, காவல்துறை அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாக ஆவேசத்துடன் பதிலளித்தார். அதோடு நிறுத்தாமல், அந்த செய்தியாளரை பார்த்து மூன்று நிமிடம் பேசியதற்கு அறிவாலயத்தில் 3 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் தரக்குறைவாக பேசினார்.

அண்ணாமலையின் இந்த தரக்குறைவான பேச்சால், செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.

அவரது அநாகரீக பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம், நாவடக்கத்துடன் நயத்தகு நாகரீக அரசியலை அண்ணாமலை கற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதேபோல், பத்திரிகையாளர்கள் பலரும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.