" செந்தில் பாலாஜிக்கு Bypass அறுவை சிகிச்சை தள்ளிவைப்பு " - மா.சுப்ரமணியன்

" செந்தில் பாலாஜிக்கு Bypass அறுவை சிகிச்சை  தள்ளிவைப்பு " -  மா.சுப்ரமணியன்

 அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் 58 ஆவது  பட்டமளிப்பு விழா கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது . 

 அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன்   பேசுகையில்: 

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 368.20 கோடி ஜெய்கா நிதி உதவியுடன் கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் அதற்காக 159 கோடி செலவில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்படவுள்ளது என்றும்,  ஆகஸ்ட் மாதத்திற்குள் இக்கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார். பின் பழைமையான கட்டிடம் இடிக்கப்பட்டு 125 கோடியில் மேலும்  புதிய கட்டிடம் கட்டப்பட்டவுள்ளது என்றும் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது  அமைச்சர் மா சுப்ரமணியன் கூறுகையில்:- 

கடந்த  15-ம் தேதி  நள்ளிரவு முதல்,    அமைச்சர்  செந்தில் பாலாஜி  நீதிமன்ற அனுமதியோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு  சிகிச்சை பெற்று வருவதாகவும், இரத்த நாள அடைப்பு இருப்பதால் ஓமந்தூரார் மருத்துவமனையில்  செந்தில் பாலாஜிக்கு Blood thinner எனப்படும் ரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் உடனடியாக Bypass அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். 

எனவே,15-ம் தேதி  இரவு காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட உடன் Blood thinner மருந்துகளை நிறுத்தியிருப்பதாகவும், மேலும், அந்த  மருந்துகளை நிறுத்தி  இன்னும் 3  அல்லது  4  நாட்கள் பார்த்து விட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். 

அதோடு, செந்தில் பாலாஜியின் துணைவியார் கேட்டுக்கொண்டதன்  காரணமாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளார்கள் என்றும், தனிநபர் விருப்பங்களில் தலையிடுவது முறையாகாது எனவும் கூறினார். 

அதனைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் வேண்டுமானால் பரிசோத்துக்கொள்ளட்டும் என நீதிமன்றத்திலேயே வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டு, இதுவரை எம்ய்ஸ் மருத்துவர்கள் யாரும் வரவில்லை என்றும் தெரிவித்தார். 

 இதையும் படிக்க     |