முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என கூறுவதா..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி.

முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என கூறுவதா..? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி.

முன்னாள் அமைச்சர்களை குற்றவாளிகள் என கூறுவதா என அதிமுக பொதுச்செயலாளர் என  எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

அரசு மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே  குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி வன்மத்தை கக்கியுள்ளதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகில் வாழும் இந்த ஆட்சியாளர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து மீள, மத்திய அரசிடம் சரணாகதி படலத்தை தொடங்கி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

மேலும், குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் அமைச்சர்களை குற்றவாளிகள் என கூறியதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க    | மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளையை தட்டிக்கேட்டால் தாக்குவதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!