மோடி, பாஜக, திமுக பற்றி சர்ச்சை பேச்சு.! பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு! 

மோடி, பாஜக, திமுக பற்றி சர்ச்சை பேச்சு.! பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு! 

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து ஸ்டேன்சுவாமியின் சிறைமரணத்திற்கு நீதி கேட்டு சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் தமிழகத்தில் திமுக வெற்றிபெற்றது சிறுபான்மையினர் போட்ட பிட்சை என்றும், தமிழக அமைச்சர்களை விமர்சித்தும் பேசியிருந்தார். அதோடு பாஜக சட்டசபை உறுப்பினர் எம்.ஆர். காந்தி ஓட்டுக்கு பணம் கொடுத்துதான், கிறிஸ்தவ மதத்திலுள்ள, நாடார் ஜாதி ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்றார் என்று மோசமான முறையில் பேசியிருந்தார். 

மேலும்,பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா பற்றியும் மோசமான கருத்துக்களை கூறியிருந்தார். அவரின் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி  வைரலானது. மேலும் இவரை கைது செய்யவேண்டும் என்றும் பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.