"தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளையை தடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் கலந்துக்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் தமிழ்நாடு மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்குவதாக குற்றம் சாட்டினார்.  மேலும், நிதி ஒதுக்கீடு செய்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசியவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளையை தடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.