தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை மற்றும் மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெயய்க்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது.

வருகிற 18-ம் தேதி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
  
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரம் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல்  பகுதிகளில் இன்று முதல் வருகிற 17-ம் தேதி வரை பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.